TamilSaaga

சிங்கப்பூரில் ஜோடியாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதிகள்… சாலை விபத்தில் கணவனின் கண் முன்னால் உயிரிழந்த மனைவி!

சிங்கப்பூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்த பெண் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நிலையில் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்டோபர்பதினெட்டாம் தேதியான நேற்று ஜுராங் டவுன்ஹால் ரோட்டில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனமும்,லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் நேற்று அதிகாலை சுமார் எட்டு மணி அளவில் நடந்த நிலையில் மரணம் அடைந்த பெண்ணிற்கு வயது 38 இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. சாலையில் பயணம் செய்யும்பொழுது வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து முறையாக வாகனம் ஓட்டினால் விபத்துகளை தடுக்கலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts