TamilSaaga

ஒரே இரவில் நாட்டின் பணக்காரராக மாறிய நபர்… உலக பணக்காரர்களை மிரள வைத்த சம்பவம்!

நமக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றாலே படாத பாடு பட வேண்டும் என்ற இந்த காலத்தில் எப்படி ஒரே இரவில் உலக பணக்காரராக ஒரு நபர் மாற முடியும் என்று தானே யோசிக்கின்றீர்கள்? ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் தான் வியட்நாமில் நடந்திருக்கின்றது. பாம் நஹத் உயங் எனப்படும் வியட்நாமை சேர்ந்த பணக்காரரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 255 சதவீதம் அதிகரித்த நிலையில் அவர் வியட்நாமின் பணக்காரராக மாறியுள்ளார்.

மின்சார வாகன உற்பத்தியாளர்களின் பங்குகள் வியட்நாமில் பட்டியலிட்ட முதல் நாளிலேயே 255% அதிகரித்த நிலையில், இவரது சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கு மக்களிடம் மவுசுகள் அதிகரித்த நிலையில் அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தற்பொழுது வேகமாக வளர்ந்து வருகின்றது. வின்பாஸ்ட் எனப்படும் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் 99 சதவீதம் பங்குகள் தற்பொழுது நஹத்திடம் உள்ளன. இதன் மதிப்பு தற்பொழுது பென்ஸ் நிறுவனத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வின்பாஸ்ட் நிறுவனத்தின் பங்கு பங்குச்சந்தையில் ஒரே நாளில் 255 சதவீதம் அதிகரித்த நிலையில் இவரது பங்கும் அதிகரித்து 44.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வியட்நாமின் நம்பர் ஒன் பணக்காரராக தற்பொழுது உருவெடுத்துள்ளார். ரஷ்யாவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர் முதலில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிலை சிறிதாக தொடங்கினார். அதில் கண்ட வளர்ச்சியின் மூலம் ரியல் எஸ்டேட், பள்ளிகள், ஷாப்பிங் மால்கள் போன்ற பல தொழில்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த அவர் பங்கானது ஒரே நாளில் நாட்டின் பணக்காரராக அவரை மாற்றியுள்ளது.

Related posts