TamilSaaga

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்… பயணிகளுக்கான முக்கிய அறிவுரைகள்!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதனை ஒட்டி சென்னை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவினை ஒட்டி நடக்கும் நிகழ்ச்சிகளை சீர்குலைக்கும் விதமாக சதி திட்டம் தீட்டப்படுகின்றது என்ற தகவல்கள் உளவுத்துறைக்கு வந்ததனை அடுத்து பாதுகாப்பு மேலும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் கேட்டிலேயே தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. மேலும் சந்தேகத்திற்கு இடமாக வாகனங்கள் ஏதேனும் இருப்பின் அவை போலீசாரால் ஒன்றிற்கு இரு முறை நன்கு விசாரிக்கப்படுகின்றன. கடந்த மூன்று வருடங்களாகவே பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த வருடமும் அதேபோல பாதுகாப்பு பின்பற்றப்படுகின்றது.

வெளியே உள்ள சோதனைகளைத் தாண்டி பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கடைசி கட்ட சோதனையும் நடத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சோதனைகளின் தீவிரம் காரணமாக உள்நாட்டுப் பயணிகள், ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவும் இருக்கும்படி விமான நிலைய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts