TamilSaaga

சிங்கப்பூரின் My First Skool கிளஸ்ட்டர் – 11 புதிய வழக்குகள் பதிவு : சுகாதார அமைச்சகம் தகவல்

சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) நண்பகல் 12 மணி நிலவரப்படி 53 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிங்கப்பூரில் பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை 66,172 ஆக உயர்த்தியுள்ளது உள்ளது.

உள்நாட்டில் பரவும் தொற்றுக்கு 50 புதிய வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில், 30 இணைக்கப்பட்ட வழக்குகள் உள்ளன மேலும் அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆறு இணைக்கப்பட்ட வழக்குகள் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டன. தொடர்பில்லாத 14 வழக்குகளும் இணைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த மூன்று பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று புதிய தொற்று குழுமங்கள் ஏதும் இல்லை என்றபோது 54 சின் ஸ்வீ சாலையில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் சம்பந்தப்பட்ட கிளஸ்டரில் நேற்று 11 வழக்குகள் அதிகரித்து மொத்தம் 31 வழக்குகளாக தற்போது உள்ளது.

மேலும் சிங்கப்பூரில் உருவான 9 கிளஸ்ட்டர்கள் நேற்று முற்றிலும் குணமடைந்த நிலையில், மூன்று முதல் 1,155 நோய்த்தொற்றுகளுடன் சிங்கப்பூரில் 102 கிளஸ்ட்டர்கள் நடப்பில் உள்ளன என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts