TamilSaaga

சுத்தத்திற்கு பெயர் போன சிங்கப்பூரில் பொது இடத்தில் நடந்த காரியம் என்ன தெரியுமா?

திறந்தவெளியில் மலம் கழிப்பது என்பது நம் ஊர்களில் வேண்டுமானால் சாதாரணமாக விஷயமாக இருக்கலாம். ஆனால் சுத்தத்திற்கு பெயர் போன சிங்கப்பூரில் அது பெரும் பேசு பொருளான சம்பவம் ஆகி உள்ளது. சிங்கப்பூரில் மெரினா பே சான்ட் ஸ் என்பது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும்.

குறிப்பாக அங்கு அமைந்திருக்கும் சிங்க உருவ சிலையானது சிங்கப்பூரின் அடையாளமாக கருதப்படுகின்றது. சுற்றுலாவிற்காக சிங்கப்பூருக்கு வருபவர்களும் இந்த இடத்திற்கு கட்டாயமாக வருவார்கள்.அப்படிப்பட்ட அந்த இடத்தில் ஒருவர் செய்த செயல் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள கடை பகுதியில் ஒருவர் மலம் கழித்த சம்பவம் கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுக்கு குறித்து இணையத்தில் வெளியான வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் கால் சட்டையை இறக்கி மலம் கழிக்கும் சம்பவம் வீடியோவாக திங்கட்கிழமை முதல் வலம் வந்து வருகின்றது .

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று விசாரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பொதுவாக சிங்கப்பூரை பொறுத்தவரை பொது இடத்தில் எச்சில் துப்புவதே பெரும் குற்றமாக கருதப்படும் நிலையில் ஒருவர் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts