TamilSaaga

சிங்கப்பூர் வந்து 15 நாட்களாச்சு.. கையில் பணம் இல்லாமல்.. நண்பரிடம் கடன் வாங்கச் சென்ற தமிழக ஊழியர்.. பணத்துடன் Purse-ஐ தொலைத்த சோகம்!

சிங்கப்பூரில் மீண்டும் ஒருவர் முக்கிய கார்டுகள், பணம் உள்ளடக்கிய தனது பர்ஸை தொலைத்துவிட்டு தற்போது உதவி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தித் தளத்துக்கு அனுப்பிய வீடியோவில் கூறுகையில், “என்னுடைய பெயர் திருநாவுக்கரசு. நான் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளேன். நான் இங்க வந்து 15 நாட்கள் ஆகிறது. இன்று (ஆக.2) காலை தேக்காவில் இருந்து நண்பரை பார்ப்பதற்காக hougang சென்றேன். செலவுக்கு பணம் இல்லை. அதனால், காசு கேட்பதற்காக தான் சென்றேன். ஆனால், எனது அண்ணன் எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக என் பர்ஸை நான் தொலைத்துவிட்டேன். அந்த பர்ஸில் நம் ஊரில் தரப்படும் Pan Card, துபாயின் இன்டெர்நேஷ்னல் லைசன்ஸ், நம் தமிழ்நாட்டின் டிரைவிங் லைசன்ஸ், 150 டாலர் பணம், என்னுடைய குடும்பத்தின் புகைப்படம், மற்றும் ஒரு சாவி ஒன்றும் பர்ஸில் இருந்தது.

அறியாமையினால் பர்ஸை நான் தொலைத்துவிட்டேன். அது யார் கையிலாவது கிடைத்தால், தயவு செய்து தகவல் கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசு அடையாளம் சொன்னது போல் ஏதாவது பர்ஸ் கிடைத்தால், +91 8269 418 418 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts