TamilSaaga

சிங்கப்பூரில் கெத்து காட்டிய புதுக்கோட்டை சிங்கங்கள்… அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருந்துச்சா… 24 டீமை அடித்து நொறுக்கி சாம்பியனான சுவாரஸ்யம்

சிங்கப்பூரில் வேலைக்காக வந்த இடத்தில் கூட சொந்த நாட்டின் பெருமையை தக்க வைப்பதில் தமிழர்களுக்கு இணை அவர்கள் தான். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்து இருக்கிறது.

சிங்கப்பூரில் ஒவ்வொரு புத்தாண்டு நாளிலும் புகழ்பெற்ற கேஜ் கிரவுண்டில் கிரிக்கெட் tournament நடத்தப்பட்டு வருகிறது. turf சிட்டியில் நடக்கும் இதில் கலந்து கொள்ளும் அணிக்கு முதல் பரிசாக $1000 சிங்கப்பூர் டாலர் பரிசு என அறிவிக்கப்பட்டு இருந்தது.

2023ம் ஆண்டின் ஜனவரி 1 நாளில் சிக்ஸ்த் அவென்யூவில் கேஜ் கிரவுண்டில் கிரிக்கெட் Tournament நடந்தது. இதில் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கடுமையாக போராடி எல்லா அணிகளையும் தெறிக்க விட்டு வீரா பாய்ஸ் கிளப்பினை சேர்ந்த Silver stick அணி சாம்பியன் பட்டத்தினை தட்டி வந்திருக்கிறார்கள்.

இந்த அணியின் அனைத்து வீரர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் தானாம். வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக $1000 சிங்கப்பூர் டாலர் கிடைத்து இருக்கிறது. இந்த அணியினை சேர்ந்த பாலா சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சிறந்த பவுலராக தாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து வந்து சிங்கப்பூரில் தாய்நாட்டின் பெருமையை நிமிர்த்திய இளம்சிங்கங்களுக்கு தமிழ்சாகா சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Related posts