TamilSaaga

சொந்தப் படம் எடுக்க ரசிகர்களிடம் நிதி கேட்ட ஹீரோ – கிடைத்ததோ 7 லட்சம்.. விரக்தியில் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் டெலிவிஷனில் பிரபலமான கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகம் ஆகி பிறகு ஆஃபிஸ் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஸ்ருதி ராஜ் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் நடித்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு பிறகு ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலமும் பெரிய வரவேற்பை பெற்றார்.

இவருடைய நடிப்பின் திறமையால் “465” மற்றும் “நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை” போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது இருந்தும் படம் சரியாக வெற்றிபெறவில்லை. இதனால் தானே சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து உருவாக்க முடிவு செய்தார் கார்த்திக் ராஜ். அதற்கு இடையே பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் ரம்யா பாண்டியனுடன் “முகிலன்” என்ற வெப் சீரியலை நடித்தார் அதுவும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

அவர் முதலில் வெளியிட்ட ஒரு விடியோவில் தன்னை யாரோ படத்தில் நடிக்க விடாமல் தடுப்பதாகவும், பின்னால் இருந்து அவர் வெற்றியை தடுப்பதாகவும் கூறினார். இவர்களை வெல்லும் வகையில் தான் தயாரிக்கும் புதுப்படத்துக்கு ரசிகர்களிடம் நிதி உதவி கேட்டு தனது வங்கி விவரங்களையும் பதிவிட்டார். சிறிய தொகையானாலும் கொடுத்து உதவும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

பிறகு இரண்டாவதாக ஒரு விடியோ வெளியிட்டார். அதில் நான் சினிமாவில் ஜெயிக்க கூடாது என நினைப்பவர்களை நிச்சயம் வெல்வேன் என்று கூறினார். இதுவரை 7 முதல் 8 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்திருப்பதாகவும் தனது படத்துக்கு 2 கோடி வரை தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தன்னுடைய ரசிகர்கள் இணைந்து 1 லட்சம் பேர் ஆளுக்கு 200 ரூபாய் கொடுத்தால் கூட எதிர்பார்க்கும் பணம் கிடைத்துவிடும் எனவும் பேசினார். ஒருவேளை தேவைப்படும் பணம் கிடைக்கவில்லை என்றால் ரசிகர்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பி அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts