TamilSaaga

“இதுபோன்ற செயல்களை சிங்கப்பூர் காவல்துறை சகித்துக்கொள்ளாது” : அதிரடி அமலாக்க நடவடிக்கை – 8 நிறுவனங்கள் மூடல்

சிங்கப்பூரில் எட்டு இரவு நேர விடுதிகள் மற்றும் உணவு மற்றும் பான நிறுவனங்களின் உரிமங்கள், பலமுறை பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த எட்டு நிறுவனங்களும் 10 முதல் 30 நாட்கள் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தடை மீறல்களில் ஹோஸ்டஸிங் சேவைகளை வழங்குதல், சமூக அளவுகளில் குழு அளவுகள் நிலவும் வரம்பை மீறவில்லை என்பதை உறுதி செய்யத் தவறியது மற்றும் அனுமதிக்கப்பட்ட வளாகத்திற்குள் பகடை விளையாட்டுகள் மற்றும் அட்டைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட அமலாக்க சோதனைகளின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டன என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களில் கான்கார்ட் ஹோட்டல் மற்றும் ஷாப்பிங் மாலில் கிளப் ஒன் மின், ஓரியண்டல் பிளாசாவில் கிளப் மாவோ மற்றும் விவா விஸ்டா ஷாப்பிங் மாலில் ஹூஹா கஃபே ஆகியவை அடங்கும். மேலும் இந்த அமலாக்க நடவடிக்கையில் தனிநபர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் பெருந்தொற்று (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகள் 2020-ன் கீழ் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு இணங்காத குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் 6 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுவது தொடர்பான பொறுப்பற்ற செயல்களை காவல்துறைக்கு சற்றும் பொறுக்காது. குற்றவாளிகள் சட்டத்தின் படி உறுதியாகக் கையாளப்படுவார்கள்” என்று காவல்துறை தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts