சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வரும் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 15) ஒரு “முக்கியமான செய்தி” தரும் சமிக்ஞையை அதாவது ஒரு Signalஐ ஒலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது எச்சரிக்கை அமைப்பு சைரன்கள், நாடளாவிய ரீதியில் ஒலிக்கப்படும். இந்த ஒரு நிமிட பயிற்சியானது மாலை 6.20 மணிக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்தி வெளியீட்டில் SCDF கூறியதாவது, “இந்த ஒரு நிமிட நீள ஒலி பயிற்சி காரணமாக யாரும் பயப்பட வேண்டாம்”. “மேலும் SGSecure மொபைல் செயலியைக் கொண்ட மற்றும் Silent Mode மற்றும் Vibrate Mode முறையில் இல்லாத அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த சிக்னல் ஒலிக்கும்”. என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அறிவித்துள்ளது.