TamilSaaga

“Red Light” ஏரியாவில் வலம்வந்த இளைஞர்.. கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்து தங்க செயினை “ஆட்டயப்போட்ட Ladyboy” – வைரலாகும் சம்பவத்தின் Video!

பாங்காக்கில் 25 வயது சுற்றுலாப் பயணி ஒருவர், நடுத்தெருவில் தன்னை அணுகி கட்டிப்பிடித்த ஒரு பெண், ஒரு சில வினாடிகளில் தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கூறியுள்ளார். தற்போது அந்த பெண்ணைக் கண்டறிய சமூக ஊடகங்களில் உதவிகளை கேட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிரடெரிக் டி வ்ரீஸ் என்ற அந்த வாலிபர். தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுகும்விட் சோய் 21ல் உள்ள ஒரு சந்திப்பில் தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார்.

சிங்கப்பூர் Changi Airport.. புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருந்து தப்பி ஓடிய நாய் – பொதுமக்களின் உதவியை நாடும் பெண்மணி!

அந்த வாலிபர், ஒரு Lady Boy தான் இந்த திருட்டுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் திருநங்கைகளைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது ஒரு வார்த்தை தான் Ladyboy. சுகும்விட் சாலை பகுதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பாங்காக்கில் வசிக்கும் வெளிநாட்டினர் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் அதிக அளவில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் மார்ச் 30 அன்று பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்

View this post on Instagram

A post shared by Frederik (@frederik_dv)

“>இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், டி வ்ரீஸ் தெருவில் அவர் நடந்து செல்வதை பார்க்கமுடிகிறது. அப்போது அவ்வழியாக வரும் பெண் ஒருவர் அவரை கட்டிப்பிடிப்பதையும் பார்க்கமுடிகிறது. இதனையடுத்து அந்த பெண் இளைஞரின் கழுத்தில் கைகளை வைத்து வா ரூமுக்கு போகலாம் என்று பாலியல் சேவைகள் வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் இறுதியில் அந்த பெண் நைசாக அவரது கழுத்தில் இருந்த சங்கியை திருடிச்செல்ல, அதை அறியாமல் அவர் சிரித்தபடி அந்த வீடியோ எடுப்பதை தொடர்ந்துள்ளார். இறுதியில் சங்கிலி காணாமல் போனது தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார் அந்த இளைஞர்.

சிங்கப்பூர்.. வாரத்துக்கு 4 நாட்கள் சேவை.. ஒவ்வொரு நாளும் தலா 2 விமானம் – பயணிகளின் கஷ்டம் அறிந்து “Good News” அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும் இதுபோல பல பெண்கள் சாலையில் நான் நடந்து செல்லும்போது வந்து கட்டிப்பிடிப்பார்கள், ஆனால் எனக்கு ஒருபோதும் இப்படி நடந்ததில்லை என்று ஊடங்களிடம் கூறியுள்ளார் அவர். அந்தப் பெண் தனது முதுகில் ஒரு தனித்துவமான பச்சை குத்தியிருந்தார் என்றும், அந்த சங்கிலி அவரது தாத்தா அவருக்கு கொடுத்ததால் அது தனக்கு மிகவும் நெருக்கமான சங்கிலி என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.

டி வ்ரீஸ் அந்த நிகழ்வை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்க, தற்போது விசாரணை நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts