TamilSaaga

வந்தே பாரத் : சிங்கப்பூர் – கொச்சி : வெளியான ஜூலை மாத அட்டவணை

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை முடிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர் இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் அவசர தேவை உள்ளவர்கள் தற்போது சிங்கப்பூர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சேவை கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு ஜூலை மாதத்தில் பறக்கவிற்கும் வந்தே பாரத் விமான சேவை குறித்த அப்டேட் வந்துள்ளது. ஜூலை மாதம் 6ம் தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இந்தியாவின் கொச்சிக்கு பறக்கவுள்ளது.

அதே சமயம் ஜூலை 6 மற்றும் 20ம் தேதி கொச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தே பாரத் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.

Related posts