TamilSaaga

Upper Thomson சாலையில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்.. “Sudden Break” அடித்த பேருந்து ஓட்டுநர்.. மனசாட்சி இல்லாமல் தப்பித்து ஓடிய டிரைவர்

சிங்கப்பூரில் இப்படியும் சில டிரைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைப் போன்ற ஓட்டுனர்களின் தவறுகளை நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

சிங்கப்பூரின் Upper Thomson சாலையில் Yishun பகுதியை நோக்கி மாலை 5:45 மணியளவில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது அதே பேருந்துக்கு முன்பாக SMP 1101 Y என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இரு வாகனங்களும் நல்ல வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தன.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 67 வயதில் விந்து விரைவில் வெளியேறுவதைத் தடுக்க… S$17,000 பணத்தை வாரி இறைத்து ஏமாந்த முதியவர் – இளைஞர்களுக்கு அட்வைஸ்

அப்போது, அந்த காரின் டிரைவர் சட்டென வண்டியை சாலையின் நடுவே ஸ்லோ செய்து நிறுத்திவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுநர், வாகனத்தை உடனே நிறுத்த முடியாமல் தடுமாறினார்.

எனினும், sudden break அடித்த ஓட்டுநர், சட்டென பேருந்தை வலது பக்கம் திருப்பினார். அப்போது, பேருந்துக்கு பின்னால் மின்னல் போல வந்து கொண்டிருந்த கார் ஒன்று, பேருந்தை உரசிக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றது.

அப்போது அந்த பேருந்தில் ஒரு பெண்ணும், 8 வயதில் ஒரு குழந்தையும் இருந்தனர். sudden break போட்ட பொழுது, பேருந்தில் இருந்த பெண், பயத்தில் அலறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இளம் பெண் முகத்தில் ஊற்றிய கொதிக்கும் எண்ணெய்.. சிதைந்த முகம் – “மீண்டு வருவேன்” என சபதமெடுத்து வாழ்க்கையை ஜெயித்த அற்புதம்!

டிரைவர் பேருந்தை லாவகமாக வலது பக்கம் திருப்பாமல் இருந்திருந்தால், நிச்சயம் அந்த கார் மீது பேருந்து மிக பலமாக மோதி, பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், இவ்வளவு அமளிதுமளி நடந்த பின்பும், அந்த காரை விட்டு இறங்கி வராத ஓட்டுநர், வண்டியை எடுத்துக் கொண்டு அப்படியே ஓடிவிட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

என்ன ஒரு “Irresponsible Driver”!

Related posts