TamilSaaga

சிங்கப்பூரில் இறந்த தமிழக தொழிலாளி மகேஷ்.. இரு மகன்களை அடுத்தடுத்து இழந்து நிராதரவாக நிற்கும் குடும்பம்

சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டு தமிழக தொழிலாளர்கள் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த ஜுலை 7ம் தேதி சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக ஊழியர் மகேஷ் அவர்களின் குடும்பத்தின் தற்போதைய நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மகேஷ் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மகேஷுக்கு சதீஷ் என்ற ஒரு அண்ணன் உள்ளார். அதேபோல், பிரகாஷ் என்ற ஒரு தம்பியும் இருந்தார். கடந்த ஆண்டு, சொந்த ஊரில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பிரகாஷ், மின் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைய மகன் இறந்து ஓராண்டு ஆன பிறகு இரண்டாவது மகனான மகேஷுக்கு திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வந்தது. இந்த 2022ம் ஆண்டு இறுதிக்குள் அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் ஆசையோடு நல்ல வரனுக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் தான் தற்போது மகேஷ் அவர்களும் சிங்கப்பூரில் நடந்த ஒரு பணியிட விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

சிங்கப்பூரில் தினம் 18 மணி நேரம் வேலை.. மூத்த மகனாக குடும்பத்தையே சுமந்து.. இன்று “Thambi Magazine” எனும் அசைக்க முடியா ஆலமரமாக வளர்ந்து நிற்கும் தமிழன்!

இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு மகன்களை பறிகொடுத்த அந்த குடும்பம் தற்போது ஆதரவின்றி நிற்கிறது. மூத்த மகன் மட்டுமே தற்போது அந்த குடும்பத்தை நிர்வகித்து வருகின்றது. இந்நிலையில் தான் இறந்த மகேஷ் அவர்களின் உறவினர் ஒருவர் நமது தமிழ் சாகா செய்தி குழுவை தொடர்புகொண்டு அந்த குடும்பத்தின் நிலை குறித்து விவரித்தார்.

பொதுமக்களாகிய உங்களது உதவியை நாடும் அந்த குடும்பத்திற்கு உதவ பல நல்ல உள்ளங்கள் முன்வரவேண்டியே இந்த பதிவு எழுதப்படுகிறது. இரு மகன்களை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் கீழே உள்ள வங்கி கணக்கின் மூலம் உதவிகளை செய்யலாம்.

Name : Kuchappa
ACC No :706160496
IFSC Code : TNSC 0011300
THANJAVUR Co-op Bank
Branch : Uranipuram branch

இந்த வங்கி கணக்கு சிங்கப்பூரில் இறந்த தமிழக ஊழியர் மகேஷ் அவர்களின் தந்தை குச்சப்பா அவர்களின் வங்கி கணக்கு

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts