TamilSaaga

சிங்கப்பூரில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை – சிவகிருஷ்ண ஆலயம் அறிவிப்பு!!

சிங்கப்பூர்:  தமிழர்கள் அனைவரும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வேளையில், இந்த ஆண்டு விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு பிறக்கிறது. மார்சிலிங் சிவகிருஷ்ண ஆலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீ சிவன் கோயில் வீட்டில் வழிபாட்டுக்கான நேரங்களை அறிவித்துள்ளது. அதன்படி காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரையிலும் பக்தர்கள் வழிபடலாம். இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக அமைய உதவும் என நம்பப்படுகிறது.

ஏப்ரல் மாதம் முழுவதும் லிட்டில் இந்தியாவில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் – மிஸ் பண்ணாதீங்க!

தமிழ் நாள்காட்டியில் சித்திரை மாதத்தின் முதல் நாளான இது, சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை 12 ராசிகளிலும் நிறைவு செய்துவிட்டு, மீண்டும் முதல் ராசியான மேஷ ராசியில் தன்னுடைய பயணத்தை துவக்கும் நாளாகும். இதைச் ‘சித்திரைத் திருநாள்’ என்றும் அழைக்கிறார்கள்.

அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நாளில் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அசாமில் பிஹு, பஞ்சாபில் பைஷாகி, மேற்கு வங்கத்தில் போஹேலா போய்ஷாக் என பல்வேறு பெயர்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மக்கள் அனைவருக்கும் விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Related posts