உலகளாவிய நாடுகள் மத்தியில் உள்ள போட்டிக்கான போக்குகள் மற்றும் பொருளாதார சூழல்களை கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவித முடிவுகளுக்கும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை அளிக்கும் என துணை தலைமைச் செயலாளர் Chee Hong Tat அவர்கள் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கான அணியில் உள்ள பணியாளர்களின் ஆதரவை வலிமைப்படுத்தவும் அவர்களுக்கான பயிற்சிகளை மேம்படுத்தவும் முதலீடு செய்யவும் வாக்குறுதி அளித்தார்.
ஆள்சேர்ப்பு மற்றும் பணியில் முன்னேற்றம் ஆகியவற்றில் சிங்கப்பூர் மக்களுக்கு நியாயமான முறையில் மதிப்பிடப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் தடையற்ற வர்த்தகம் போன்றவற்றை பற்றி சில தினங்கள் முன்பு அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து Chee Hong Tat தனது முகநூலிக் இந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.