TamilSaaga

சிங்கப்பூரில் அதிர்ச்சி: அங் மோ கியோவில் உள்வாடகை மோதல் – சக ஊழியரை கத்தியால் வெட்டிய இந்தியர் கைது!

சிங்கப்பூர்: அங் மோ கியோ (Ang Mo Kio) பகுதியில் உள்ள ஓர் எச்.டி.பி (HDB) குடியிருப்பு பிளாட்டில், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்களை உள்வாடகைக்கு விட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், சக ஊழியரை கத்தியால் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் மற்றும் குற்றச்சாட்டு:

21 வயதான ராகுல் சிங் என்பவர் மீது, நேற்று (ஜூன் 24) காலையில் இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் ஆபத்தான முறையில், வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்தியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஜூன் 23 ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில், அங் மோ கியோ அவென்யூ 8 (Ang Mo Kio Avenue 8) பகுதியில் உள்ள பிளாக் 513 இல் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட ராகுல் சிங், 22 வயதான ராஜ்தீப் (Rajdeep) என்ற மற்றொரு ஊழியரை கத்தியால் காயப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் ராஜ்தீப்பின் இடது கையில் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

மேலும், இன்னொரு நபரை நோக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராகுல் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது ராகுல் சிங் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் ஜூலை 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

என்ன நடந்தது?

பொது குடியிருப்பு பிளாக்கில் உள்ள மூன்று அறைகள் கொண்ட வீட்டில் இந்தத் தாக்குதல் நடந்தது.

வாடகை மற்றும் தங்குமிடம்:

ஏஜென்ட் மூலம் ஏழு மாதங்களுக்கு முன்பு ராஜ்தீப் அந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வந்த மற்ற மூன்று வெளிநாட்டு ஊழியர்களுடன் அவர் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும், அங்கு தங்கியிருப்பவர்களிடம் ராகுல் சிங் வாடகை வசூல் செய்து, பின்னர் அந்தத் தொகையை வீட்டு உரிமையாளருக்கு கொடுத்து வந்துள்ளார். ராஜ்தீப் மற்றும் அவரது அறைத் தோழர்களுக்கு மாத வாடகை S$450 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNB வழக்கில் உதவுவதாகக் கூறி, பெண்ணிடம் பா*யல் அத்துமீறிய போலீஸ்!

20 வெளிநாட்டு ஊழியர்கள் ஒரே வீட்டில்:

ராஜ்தீப் கூறியபடி , ஆரம்பத்தில் அந்த வீட்டில் வசித்த அனைவரும் அமைதியாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, ராகுல் சிங் அந்த வீட்டை வெளி ஆட்களுக்கும் உள்வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளார்.

இதனால், அந்த வீட்டில் சுமார் 20 வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது வீட்டில் கடுமையான நெரிசலையும், தங்குவதற்குச் சிரமத்தையும் ஏற்படுத்தியதாக ராஜ்தீப் கூறினார்.

HDB விதிமுறை மீறல்:

HDB கழகத்தின் கூற்றுப்படி, மூன்று அறைகள் கொண்ட ஓர் HDB பிளாட்டில் அதிகபட்சம் ஆறு வாடகைதாரர்கள் மட்டுமே தங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இது இங்கு மீறப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் இரண்டு படுக்கையறைகள் மட்டுமே இருந்ததால், ராஜ்தீப்பும் அவரது இரண்டு தோழர்களும் ஒரு படுக்கையறையைப் பகிர்ந்து கொண்டதாக ராஜ்தீப் கூறினார். ராகுல் சிங்கும் மற்ற 16 பேரும் மற்றொரு படுக்கையறையிலும், வசிக்கும் அறையிலும் (living room) தூங்கியுள்ளனர். பின்னர், கூடுதல் நபர்களைத் தங்க வைப்பதற்காக, ராகுல் சிங் படுக்கை வசதியை வசிக்கும் அறைக்கு (living room) மாற்றியதால், ராஜ்தீப்பும் அவரது அறைத் தோழர்களும் தரையில் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் மோதல்:

வீட்டில் ஆட்கள் அதிகமாகியதால், இரவில் சத்தம் தாங்க முடியவில்லை, அங்கு வசித்தவர்களின் ஓய்வு சீர்குலைந்தது என ராஜ்தீப் ஷின் மின் செய்தி நிறுவனத்திடம் கூறினார். மேலும், அனைவருக்கும் ஒரே சமையலறை மற்றும் கழிப்பறை இருந்ததால், அந்த இடம் மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும் ராஜ்தீப் தெரிவித்தார்.

“நாங்கள் பலமுறை எங்கள் எதிர்ப்புகளை ராகுல் சிங்கிடம் தெரிவித்தோம். ஆனால், அவர் எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார். இதுபோன்று உள்வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானது என ராஜ்தீப், ராகுல் சிங்கை எச்சரித்த போதும், ராகுல் சிங் அதை காதில் வாங்கவில்லை என்றும் ராஜ்தீப் சொன்னார்.

சந்தேகப்படும்படியான வருமானம்:

வெளிநாட்டு ஊழியர்களின் வாடகை தலா S$300 ஆக இருந்தது.மொத்தம் 20 பேருக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது S$6,000 வசூலிக்க முடியும். ஆனால், வீட்டின் உண்மையான வாடகை S$3,000 மட்டுமே. மீதமுள்ள பணம் ராகுல் சிங் தனது தனிப்பட்ட செலவுக்குப் பயன்படுத்தினார்.

ஜூன் 23 அன்று, வீட்டை உள்வாடகைக்கு விடுவது தொடர்பாக ராகுல் சிங்குக்கும் ராஜ்தீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறியது. அப்போது, ராகுல் சிங் கத்தியை எடுத்து ராஜ்தீப்பின் அறைத் தோழரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்க, ராகுல் சிங் மீண்டும் கத்தியைச் சுழற்றினார். அந்த நேரத்தில், தன் நண்பரைப் பாதுகாக்க ராஜ்தீப் தனது கையை நீட்டினார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது என்று ராஜ்தீப் விவரித்தார்.

சிங்கப்பூரில் அதிர்ச்சி: புவன விஸ்தா, ஹாலந்து பகுதிகளில் வெளிநாட்டவர்கள் கைவரிசை!

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ராகுல் சிங், கத்தியை அங்கேயே வீசிவிட்டு ஓடிவிட்டார் என்றும் ராஜ்தீப் கூறினார்.

கைது மற்றும் சிகிச்சை:

சம்பவம் குறித்து ராஜ்தீப் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் ராகுல் சிங்கை கைது செய்தனர்.

ராஜ்தீப், செங்காங் பொது மருத்துவமனைக்கு (Sengkang General Hospital) கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது இடது கையில் ஏற்பட்ட காயத்திற்கு ஏழு தையல்கள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்தீப் ஒரு ஹோட்டலில் வெயிட்டராக வேலை செய்வதாகவும், காயம் பெரிதாக இல்லாவிட்டாலும், அவரது நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரில் நடந்த சம்பவம்: 7 வயது மாணவிக்கு தொல்லை கொடுத்த முன்னாள் ஆசிரியர்!

Related posts