சிங்கப்பூரில் ஏணியிலிருந்து கீழே விழுந்ததால் நகர முடியாமல் இருந்த ஒரு பணியாளரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) கப்பலில் இருந்து மீட்டது. இதுகுறித்து SCDF வெளியிட்ட முகநூல் பதிவில் பல தகவல்களை வெளியிட்டுள்ளது.
“சிங்கப்பூரில் நேற்றிரவு சுமார் 7.10 மணியளவில், சிங்கப்பூரின் தென்மேற்கில் நங்கூரமிடப்பட்ட கப்பலில் இருந்து மருத்துவ உதவிக்கான அழைப்பை சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை (SCDF) பெற்றது. SCDF குழு சம்பவ இடத்திற்கு விரைந்தபொது குழு உறுப்பினர் ஒருவர் ஏணியில் இருந்து கீழே விழுந்து அசைவற்ற நிலையில் இருந்தார்”.
“இந்த சம்பவத்திற்கு இரண்டு SCDF கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. நங்கூரமிடப்பட்ட கப்பலுடன், SCDF கடல் வல்லுநர்கள் – அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநராக குறுக்கு பயிற்சி பெற்ற ஒருவர் – நிலைமையை மதிப்பிடுவதற்காக விரைவாக மீட்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் கப்பலில் ஏறினார்”.
“அவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது, எனவே மருத்துவ வல்லுநர்கள் அந்த காயமடைந்தவரை கையாள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து, அவரை கவனமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள்”. இந்நிலையில் பாத்திரமாக மீட்கப்பட்ட அந்த தொழிலாளி முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.