TamilSaaga

Chinatown பகுதியில் 2 உணவுக்கடைகள் தற்காலிகமாக மூடல்… வாடிக்கையாளருக்கும் அபராதம்

சிங்கப்பூர் சைனாடவுனில் (Chinatown) செயல்பட்டு வரும் 20க்கு மேற்பட்ட உணவுக்கடைகளில் நேற்று (ஜீன்.27) பயண கழக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ஒரு உணவகத்தில் 4 பேர் மேசையில் அமர்ந்து உணவருந்துவது கண்டுகொள்ளப்பட்டது. ஏற்கனவே அரசு 2 பேர் மட்டுமே மேசையில் அமர வேண்டும் அதிலும் 1 மீட்டர் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் அதனை மீறிய உணவகத்துக்கு 1000 வெள்ளிகளும் வாடிக்கையாளர்கள் 4 பேருக்கும் தலா 300 வெள்ளிகளும் அபராதம் விதித்தது.

இந்த கடையுடன் விதியை மீறி செயல்பட்ட மற்றொரு கடையும் சேர்த்து 2 கடைகளையும் 10 நாள்கள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டது.

Related posts