TamilSaaga

சிங்கப்பூர் பிரதமருக்கு புருனே அரசின் மிக உயரிய விருது.. தடபுடலாக நடக்கவிருக்கும் பிறந்தநாள் விழா – புருனே செல்லும் சிங்கை அமைச்சர்கள்

நமது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஜூலை 14 முதல் 16 வரை புருனே தாருஸ்ஸலாம் பயணத்தின் போது அந்நாட்டின் அரச மரியாதையைப் பெறுவார்கள் என்ற அதிகாரப்பூர்வ தற்போது வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் பிரதம மந்திரியின் அலுவலகம் (PMO) அளித்த தகவலின்படி, பிரதமர் லீ புருனேயின் சுல்தான் ஹசனல் போல்கியாவிடமிருந்து தர்ஜா கெராபத் லைலா உதாமா (புருனே அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்று) என்ற விருதை பெறவுள்ளார்.

இதற்கிடையில், பிரதமரின் மனைவி ஹோ, தர்ஜா படுகா செரி லைலா ஜசா என்ற விருதை சுல்தானிடமிருந்து பெறவுள்ளார், இஸ்தானா நூருல் ஈமானில் தான் இந்த விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இன்று இரவு நடக்கும் Toto Draw.. Top Prize S$8 மில்லியன் – நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

சுல்தான் ஹசனலின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் லீ புருனே செல்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது பிரதர் அலுவலகம். ஹோ தவிர, அவருடன் PMO அமைச்சரும், வெளியுறவு மற்றும் கல்விக்கான இரண்டாவது அமைச்சருமான மாலிகி ஒஸ்மானும் அங்கு செல்கின்றார்.

பிரதமர் லீ, PMO, வெளியுறவு அமைச்சகம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சக அதிகாரிகளும் உடன் செல்வார்கள். முதலீட்டு விழா மற்றும் அரச விருந்தில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் PM லீ சுல்தானுடன் பார்வையாளர்களை சந்திப்பார் மற்றும் அவரது பயணத்தின் போது பல்வேறு புருனே அமைச்சர்களை சந்திக்கவுள்ளார்.

மேலும், தெம்புராங்கில் உள்ள சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் பயிற்சி மையங்களையும் அவர் பார்வையிடுவார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts