TamilSaaga

“சிங்கப்பூரில் சொந்த மகன் மீது கொடூர தாக்குதல்கள்” : PPOஐ மீறிய 40 வயது தாய்க்கு 27 வார சிறை

சிங்கப்பூரில் கடந்த 2017ம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவு (PPO) வழங்கப்பட்டது, இது அவரது டீனேஜ் மகனுக்கு எதிரான அவருடைய வன்முறைச் செயல்களைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு அந்த தடையை பலமுறை மீறியது தெரியவந்துள்ளது. அந்த பெண்மணி 16 வயது சிறுவன் மீது ஒரு பீங்கான் கிண்ணத்தை வீசியுள்ளார். அது அவனது கன்னத்தைத் தாக்கி ரத்தம் வந்துள்ளது. மற்றொரு சம்பவத்தில் சிறுவனின் வலது கழுத்து எலும்பில் ஒரு முறை சைக்கிள் பூட்டைப் பயன்படுத்தி தாக்கியதில் ஒரு சிறிய வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 30), அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான உத்தரவின் காரணமாக பெயரிட முடியாத அந்த 40 வயதான பெண்ணுக்கு 27 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தாக்குதல் மற்றும் PPO-ஐ மீறியதாக தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் குற்றவியல் மிரட்டலின் ஒரு எண்ணிக்கையையும் அவர் ஒப்புக்கொண்டார். அண்மைய நாட்களில் தாய் ஒருவர் தனது சொந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் சிறைக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும்.

கடந்த புதன்கிழமை, 38 வயதுடைய இல்லத்தரசி ஆறு மற்றும் 10 வயதுடைய தனது இரண்டு மகள்களை துன்புறுத்தியதால் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 40 வயதுடைய பெண்ணின் தற்போதைய வழக்கில், இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று அதிகாலை 2 மணியளவில் அந்த சிறுவனின் தாய் தன் மகனின் மீது வருத்தத்தில் இருந்ததாக நீதிமன்றம் கூறியது. அந்த பெண் கொடுத்த மேஜை விசிறியை அவன் தூக்கி எறிந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஏப்ரல் 6ம் தேதி, அந்த சிறுவன் அவனது செருப்புகளை ரேக்கில் சரியாக வைக்காததற்காக அவனைத் திட்டியுள்ளார். அதன் பிறகு வாக்குவாதம் செய்யத் தொடங்கியுள்ளார். துணை அரசு வழக்கறிஞர் (டிபிபி) கோ யி வென் கூறுகையில்: “குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே சிகரெட் துண்டுகள் அடங்கிய சிறிய தகரத்தை பாதிக்கப்பட்டவரை நோக்கி வீசினார என்றும் அதனால் அவர் மார்பில் அதில் பட்டு வழி ஏற்பட்டதாகவும் கூறினார்.

Related posts