TamilSaaga
Singapore Prison

காதலை ஏற்க மறுத்த பணிப்பெண்.. மிரட்டல் விடுத்த நபர் – சிங்கப்பூர் கோர்ட் எடுத்த நச் முடிவு!

சிங்கப்பூரை பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து வந்து பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் அதிகம். அது நாளுக்கு நாள் கொஞ்சம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிட வேலை, சமையல் என்று தொடங்கி பெரு நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் கூட வெளிநாட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இல்ல பணிப்பெண்கள்

அதேபோல வியட்நாம், இந்தோனேஷியா, இந்தியா, மலேஷியா மற்றும் சில அண்டை நாடுகளில் இருந்து பெண்களும் சிங்கப்பூர் வந்து இல்ல பணிப்பெண்களாக வேலை செய்து வருகின்றனர். சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை வெளிநாட்டவர்கள் இங்கு வந்து செய்யும் வேலை சிறிதோ அல்லது பெரிதோ, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் எப்போதும் முனைப்புடன் இருந்து வருகின்றது.

காதலை ஏற்க மறுத்த பணிப்பெண்

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சுமார் மூன்று மாதங்கள் முகமது கைருல்னநயிம் ரோஸ்லின் என்பவரது வீட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார் ஒரு இல்ல பணிப்பெண். அந்த வீட்டின் உரிமையாளரான 37 வயதுடைய முகமது, அங்கு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.

பணிப்பெண் அங்கிருந்து 3 மாத காலத்தில் அவர் மீது முகமதுக்கு காதல் மலர்ந்துள்ளது. மேலும் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அவ்வப்போது கூறி வந்ததாக கூறப்படுகிறது.

கத்தியை காட்டி மிரட்டல்

இந்த சூழலில் தான், கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி பிற்பகல் நேரத்தில், அந்த பணிப்பெண் தன்னுடைய காதலை ஏற்காதது தனக்கு மணமுடைவு ஏற்படுத்தி உள்ளதாகவும். தன்னுடைய குடும்பத்தில் அதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சமையலறையில் இருந்த ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு தன் காதலை ஏற்குமாறு அந்த பணிப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் முகமது.

சிங்கப்பூரை கலக்க வரும் தானியங்கி சிற்றுந்து – சேவை எப்போ துவங்குது தெரியுமா?

உதவிய பாதசாரிகள்

செய்வதறியாது திகைத்துப் போய் வீட்டிலேயே பதுங்கி இருந்த அந்த பணிப்பெண், நேரம் பார்த்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதன் பிறகு அந்த வீட்டின் அருகில் இருந்த பாதசாரிகள் சிலரின் உதவியால் போலீசாரை அவர் அணுகி இருக்கிறார். கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முகமது கைருல்னநயிமுக்கு 40 நாள் சிறிதண்டனையும் அபராதமும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts