TamilSaaga

“சிங்கப்பூரில் மூன்று இளம் வயது பெண்களை கர்பமாக்கிய நபர்” : 17 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது

சிங்கப்பூரில் 21 வயது இளைஞன் ஒருவன், தனது மூன்று பெண் தோழிகளை கர்பமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்பமாக்கப்பட்ட மூன்று பெண்களில் இருவர் வயது குறைந்தவர்கள் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) அந்த நபருக்கு ஒரு வருடம் சீர்திருத்தப் பயிற்சியில் இருக்க தண்டனை விதிக்கப்பட்டுள்ள்ளது. சிங்கப்பூரில் சீர்திருத்தப் பயிற்சி என்பது சோதனைக் காலத்தை விட கடுமையான தண்டனையாகும், இது இளைய குற்றவாளிகளை ஒரு கட்டமைக்கப்பட்ட சூழலில் புனர்வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் – திருச்சி விமான டிக்கெட் புக்கிங் தொடக்கம்

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் GAG உத்தரவுகளின் காரணமாக பெயரிட முடியாத குற்றவாளி, நன்னடத்தைக்கு தகுதியற்றவர் என்று கண்டறியப்பட்டது. அவர் கடந்த ஜூலை மாதம் 16 வயதுக்குட்பட்ட மைனரை பாலியல் ரீதியாக அணுகிய நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார், மேலும் தண்டனையின்போது 17 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

இந்த நபரால் பாதிக்கப்பட்ட மூவரில், இளம் வயது பெண்ணுக்கு 12 வயதில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுமிகள் 15 மற்றும் 18 வயதில் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அந்த நபர் ஜனவரி 2019-ல் இன்ஸ்டாகிராமில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை சந்தித்தார். அப்போது அவனுக்கு 18 வயது என்று அவன் கூற, அந்த சிறுமி தனக்கு 13 வயதாகபோகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் அதே மாதத்தின் பிற்பகுதியில் குற்றவாளியின் வீட்டில் சந்தித்தனர், அங்கு அந்த நபர் சிறுமியின் மீது பாலியல் ஊடுருவல் குற்றத்தைச் செய்துள்ளார்.

ஏப்ரல் 30, 2019 அன்று, சிறுமி 10 வார கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் மே மாதம் கருவை கலைத்தார், மேலும் சோதனையில் குற்றவாளி அந்த குழந்தையின் தந்தையாக இருக்க “99.9999 சதவீதம் சாத்தியம் உள்ளது” என்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து குற்றவாளி இரண்டாவதாக பாதிக்கப்பட்ட 18 வயது சிறுமியுடன் ஆகஸ்ட் 2019 முதல் செப்டம்பர் 2020 வரை டேட்டிங் செய்யத் தொடங்கினார். ஜனவரி 2020 இல் தனது வீட்டிற்கு வெளியே அவளுடன் தகராறு செய்து, அவளது கன்னத்தில் அறைந்து கீழ் தள்ளி முதுகில் உதைத்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இதுவரை இரண்டு குறைந்த வயது பெண்கள் உள்பட மூன்று பெண்களை கர்பமாகிய அவர் இறுதியில் போலீசில் சிக்கினார். ஒரு மைனர் மீதான பாலியல் ஊடுருவலின் ஒவ்வொரு குற்றத்திற்கும், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

Related posts