TamilSaaga

பொது இடத்தில் பெண்ணை தவறாக படம் பிடித்த நபர் – கைது செய்தது போலீஸ்

சிங்கப்பூர் கிளமெண்டியில் உள்ள எம்.ஆர்.டி நிலையத்தில் ஒரு பெண்ணை தகாத வகையில் படம் பிடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளமெண்டி என்.ஆர்.டி நிலையத்தின் மின் படிகளில் ஒரு பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த பெண்ணை தகாத வகையில் தவறாக படம் பிடித்துள்ளார். இவரின் செயலை பார்த்த போக்குவரத்து காவல் அதிகாரிகள் அந்த நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

பிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர் என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் வகையில் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் மற்றும் இவையுடன் சேர்த்து பிரம்படி வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

Related posts