TamilSaaga

சிங்கப்பூரின் CapitaLand நிறுவனம் : இரண்டாவது முறையாக இந்திய தளவாடத் துறையில் முதலீடு

சிங்கப்பூரின் சொத்துச் சந்தை நிறுவனமான Capitaland நிறுவனம் இந்தியாவின் தளவாட துறையில் முதலீடு செய்ய சுமார் 400 மில்லியன் மதிப்புள்ள தனியார் முதலீட்டு நிதியை தொடங்கியுள்ளது.

அந்த நிறுவனம் இந்திய தளவாட துறையில் தொடங்கியிருக்கும் இரண்டாவது முதலீட்டு நிதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, மும்பை, பெங்களூர், புனே, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய ஆறு பெருநகரங்களிலும்.

கோயம்புத்தூர், கொல்கத்தா. ஜெய்ப்பூர் போன்ற வளர்ந்துவரும் நகரங்களிலும் உற்பத்தி மையங்களை அமைப்பதில் நிதிகளை முதலீடு செய்யும் Capitaland, இந்தியா தளவாட துறை முதலீட்டு நிதியில் சொத்துக்களை Ascendas Firstspace நிறுவனம் நிர்வகிக்கும்.

ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்துள்ள Capitaland நிறுவனத்தின் நிதியையும் Ascendas Firstspace நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts