TamilSaaga

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் நபரின் மரண தண்டனை நிறுத்த வேண்டும் – மலேசிய பிரதமர் கோரிக்கை

சிங்கப்பூரில் இந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நபருக்கு பரிவு காட்டும்படி மலேசியா பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அவர்கள் சிங்கப்பூர் பிரதமர் லீ இடம் கொரிக்கை வைத்துள்ளார்.

33 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற அந்த நபரின் மரண தண்டனை உலக அரங்கின் பார்வையில் எதிரிலொத்து வருகிறது.

அந்த நபர் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர் எனவும் அவரை விடுவிக்கவும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை அளித்து வருகின்றனர்.

நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அதிபருக்கு புதிய கருணை மனு ஒன்றை அளிக்க வாய்ப்பளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளராக பெர்னாமா தெரிவித்துள்ளார்.

சுமார் 42.72 கிராம் போதைப்பொருள் கடத்தி வந்ததற்காக 2009 ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளால் அவர் கைது செய்ய்ப்பட்டார்.

Related posts