TamilSaaga

தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 வயது ஆணுக்கு மாரடைப்பு – விசாரணையை தொடங்கிய சுகாதார அமைச்சகம்

மலேசியாவில் தனது முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட 16 வயது ஆடவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தனது விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு அந்த ஆடவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடந்த ஜூலை 3ஆம் தேதி Khoo Teck Puat மருத்துவமனையின் சுகாதார அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்ட அந்த வாலிபர் கடுமையான பளுதூக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது மயங்கி விழுந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அந்த ஆண்டவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் தடுப்பூசியை அவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தூக்கிய எடை அவரது உடல் எடையை விட அதிகம் என்று அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts