TamilSaaga

‘தன்னலமின்றி சேவை செய்யும் தாதியர்கள்’ – மதிப்பிற்குரிய தாதியர் விருது பெற்ற 125 பேர்

இந்த நோய் பரவல் காலத்தில் தன்னலம் பார்க்காமல் பொது மக்களுக்கு உதவி செய்யும் முன்களப் பணியாளர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் தாதியர்கள் 125 பேருக்கு மதிப்புக்குரிய தாதியர் விருது (Nurses Merit Award) வழங்கப்பட்டுள்ளது.

இன்று இணைய வழியில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் கலந்து கொண்டார். மேலும் பிற ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகமானோர் இந்த விருதை பெறுவதாக கூறப்படுகிறது.

தாதியர் பணியில் சிறப்பாக செயல்பட்டு துறையின் மேம்பாட்டுக்கு பங்களித்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். அவர்களில் சமூக பரிமாற்ற துறை, தனியார் மருத்துவமனைகள், பொது சுகாதார பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

விருதுகளைப் பெற்றவர்கள் சீருடை அணிந்து கொள்ளும் முத்திரையும் மற்றும் ஆயிரம் வெள்ளி ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

Related posts