TamilSaaga

சிங்கப்பூரில் சாலை விபத்து.. தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒட்டுனர் – மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர் சாலையில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனையில் சேர்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தானது கடந்த (அக்.3) ஞாயிற்றுக்கிழமை பாசிர் ரிஸ் டிரைவ் 3, இலாயஸ் சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையில் உள்ளார்.

சாலையில் உணவு டெலிவரி நபரான மோட்டர் வாகன நபரின் மீது மெர்சடஸ் பென்ஸ் கார் ஒன்று மோதி அவர் அந்த இடத்திலிருந்து தூக்கி விசப்பட்டுள்ளார்.

அந்த வழியில் பயணம் செய்த மற்றவர்கள் காயமடைந்த நபருக்கு அந்த சமயத்தில் உதவியுள்ளனர்.

25 வயது மதிக்கத்தக்க அந்த நபாரனவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என காவல்துறை தகவல் அளித்துள்ளது.

Related posts