TamilSaaga

சிங்கப்பூர் – ஆஸ்திரேலிய பயணத் திட்டம் 2021 இறுதியில் துவங்க வாய்ப்பு – சுற்றுலா அமைச்சர் தெஹான் கருத்து

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய இடையிலான ஒரு பயண திட்டமானது 2021 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள திரு. டான் தெஹான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிஎன்ஏ செய்திக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை அவர் கூறியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய இடையேயான பயணத்தை காண இரு நாடுகளும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு நாட்டிற்கும் இடையேயான பயணத்தை துவங்கும் முன்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.

இது போன்ற கட்டத்தில் இரண்டு நாடுகளும் தங்களது தடுப்பூசி திட்டத்தின் நிலையை வெளிப்படுத்தவும் மேலும் தடுப்பூசி சான்றிதழ் போன்ற நடைமுறைகளும் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மற்றும் நடைமுறை தொடர்பான விடயங்களில் இருநாட்டின் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts