TamilSaaga

சிங்கப்பூரில் 14 வயது சிறுவனின் மீது மோதிய கார்… தூக்கி எறியப்பட்ட சிறுவனின் ஷூ!

சிங்கப்பூரில் உள்ள தோ பயோ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை சுமார் காலை எட்டு மணி அளவில் சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகின்றது.

இதனை ஒட்டி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில் காரின் முகப்பு கண்ணாடி உடைந்திருப்பதையும் சிறுவனின் சைக்கிள் அருகில் விழுந்திருப்பதும் தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் சிறுவன் பள்ளிக்குச் செல்லும் பொழுது அணிந்திருந்த ஷூக்கள் அருகில் தரையில் கிடப்பதும் புகைப்படத்தில் தெரிகின்றது. சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்பொழுது சிறுவனின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

Related posts