TamilSaaga

பிலிப்பைன்ஸ் நாட்டில் விமான விபத்து – 50 பேர் பலி, 53 பேருக்கு படுகாயம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமானத்தில் இருந்த 96 பயணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் Cirilito கூறியுள்ளார்.

சுலு என்ற மாநிலத்தில் உள்ள ஜோலோ என்ற தீவில் விமானம் தரையிறங்க முயன்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் அண்மையில் ராணுவத்தில் பயிற்சி பெற்று முடிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த 50 பேரில் 47 பேர் இராணுவ வீரர்கள் என்றும் மீதமுள்ள மூன்று பேர் பொதுமக்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. கற்களை வெட்டும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில் அவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

காயமடைந்து உயிர் தப்பியவர்களில் விமானிகள் உள்ளனரா என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. அந்த விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related posts