TamilSaaga

சிங்கப்பூர் Dormitoryயில் மேலும் 692 பேருக்கு தொற்று பரவல் : மூன்றாவது நாளாக 3000ஐ கடந்த பாதிப்பு

சிங்கப்பூரில் புதிய பெருந்தொற்று வழக்குகள் மூன்றாவது நாளாக கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 7) 3 ஆயிரத்தை தாண்டியுள்ளன. வைரஸ் காரணமாக ஏற்பட்ட சிக்கலால் மேலும் மூன்று இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. 57 மற்றும் 90 வயதிற்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் 78362, 84535 மற்றும் 100512 வழக்குகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை, இரண்டு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன என்று MOH தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சிங்கப்பூரில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி மொத்தம் 3,483 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது கடந்த புதன்கிழமை பதிவான 3,577 வழக்குகளைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வழக்குகளில், 3,475 உள்நாட்டில் பரவுகிறது, இதில் சமூகத்தில் 2,783 வழக்குகளும், புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதிகளில் 692 வழக்குகளும் உள்ளன. அதேபோல வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,16,864 வழக்குகள் பதிவாகியுள்ளன. வியாழக்கிழமை ஒரு புதிய வழக்கைச் சேர்த்த பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் உட்பட ஐந்து செயலில் உள்ள கிளஸ்டர்களை “உன்னிப்பாகக் கண்காணிப்பதாக” MOH தெரிவித்துள்ளது. அந்த தொற்று குழுமம் தற்போது 326 நோய்த்தொற்றுகளைக் கொண்டுள்ளது. டோ பயோவில் உள்ள யுனைடெட் மெடிகேர் கேர் நர்சிங் ஹோம் சம்பந்தப்பட்ட ஒரு கிளஸ்டர் 15 புதிய வழக்குகளை கொண்டுள்ளது அது மொத்தம் 50 வழக்குகளை எட்டியது.

மேலும் செயலில் உள்ள கொத்துக்களில் மூன்று தங்கும் விடுதிகளும் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில் உள்ளது, இது 11 புதிய வழக்குகளைச் சேர்த்த பிறகு 406 நோய்த்தொற்றுகளை எட்டியது.

Related posts