TamilSaaga

“சிங்கப்பூரில் மாணவனிடம் பாலியல் சீண்டல்” – ஆசிரியருக்கு 2.5 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி விதிப்பு

சிங்கப்பூரில் தனது முன்னாள் மாணவரை தனது தத்துப்பிள்ளையாக மாற்றி, பின்னர் தூக்கத்தில் அந்த சிறுவனை துன்புறுத்திய ஆண் ஆசிரியர் ஒருவற்கு இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 9) 2½ ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 36 வயதான அந்த நபருக்கு 3 பிரம்படிகளும் வழங்கப்படும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்குப் பிறகு அந்த நபர் இரண்டு முறை துன்புறுத்தல் மற்றும் மற்றொரு குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் பொருட்டு அந்த சிறுவன் மற்றும் அந்த சிறுவன் பயின்றுவரும் பள்ளி பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

அந்த நபர் கடந்த ஜூலை 2017 முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், இனி எந்தப் பள்ளியிலும் அவரால் கற்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாதிக்கப்பட்டவரின் முதன்மை 6 படிவ ஆசிரியராக இருந்தார் மற்றும் 2016ல் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கற்பித்துள்ளார். அந்த காலகட்டத்தில் அவருக்கும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கும் “சாதாரண ஆசிரியர்-மாணவர் உறவு” இருந்தது என்று நீதிமன்றம் முன்பு கூறியது. ஆனால் அவர்கள் அந்த ஆண்டே பள்ளிக்கு வெளியே மூன்று முறை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியரின் தத்துப்பிள்ளையாக மாற ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ஜூன் 15, 2017 அன்று, பாதிக்கப்பட்டவர் தூங்குவதற்காக அவரது குடியிருப்பில் இருந்தபோது, ​​அந்த ஆசிரியர் அந்த சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை இரண்டு முறை தொட்டுள்ளார். இந்நிலையில் அந்த முன்னாள் ஆசிரியருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts