TamilSaaga

கும்மென்ற இருட்டான நெடுஞ்சாலை.. 137கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த கார் – நடுரோட்டில் கூட்டமாக நின்ற மாடுகள் மீது மோதிய பரிதாபம் – Video உள்ளே

கும்மென்ற இருட்டு சூழ்ந்த நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று நடுரோட்டில் குவிந்திருந்த மாடுகள் மீது மோதிய Dash Cam காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் காட்சிகளை பேஸ்புக் பயனர் பெர்னார்ட் பாங் தனது இணையத்தில் பதிவேற்றியுள்ளார். நள்ளிரவு 1:30 மணியளவில் காரின் Dash Camல் பதிவான அந்த வீடியோவில், தெரு விளக்குகள் இல்லாத நெடுஞ்சாலையில் ஓட்டுநர் பயணிப்பதைக் காணமுடிகிறது.

கார் ஓட்டுநர் மணிக்கு 133 கிமீ வேகத்தில் இருந்து 137 கிமீ வேகத்தில் அதிவேகமாகச் சென்று இடதுபுறத்தில் செல்லும் ஒரு காரை முந்திச் செல்வதையும் நம்மால் காணமுடிகிறது. நொடிப்பொழுதில் எல்லாமே மாறிவிடும் என்று கூறுவதைப்போல எல்லாம் ஒருநிமிடத்தில் மாறிவிட்டது.

கோவிலுக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 86 வயது முதியவர் செய்த படுபாதக செயல் – சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

கும்மென்ற இருட்டான அந்த மலேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் வேகமாக செல்ல செல்ல சட்டென்று எதிரே ஒரு மாடுகளின் கூட்டம் நிற்பதை பார்த்துள்ளார். ஆனால் 139 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் காரை சட்டென்று நிறுத்துவது எளிதல்ல.

சிங்கப்பூர் Upper Changi பகுதி.. கண்மூடித்தனமாக சாலையை கடக்க முயன்ற நபர்.. துரிதமாக செயல்பட்ட ஓட்டுநரால் தடுக்கப்பட்ட விபத்து – வெளியான Video

இந்த விபத்தில் எத்தனை மாடுகளுக்கு காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை, உண்மையில் நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க அதிவேகத்தில் செல்வதை ஓட்டுனர்கள் தவிர்க்க வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts