TamilSaaga

“16 தையல் போடப்பட்டுள்ளது” – பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா வெளியிட்ட அப்டேட்

தமிழ் ரசிகர்கள் வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அதே அளவிலான முக்கியத்துவத்தை பல ஆண்டுகளாக சின்னத்திரைக்கு அளித்துவருகின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இதன் காரணமாகத் தான் சின்னத்திரையில் மட்டுமே பிரபலமான இருந்த பலர் இன்று சூப்பர் ஹீரோவாக வலம்வருகின்றனர். அதற்கு நம்ம “லொள்ளு சபா” சாண்டா என்னும் சந்தானம் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளித்திரையில் வேற லெவலில் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அவர்.

அவரை போலவே பலர் சின்னத்திரையில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றனர். அந்த வரிசையில் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்காத இடம்பிடித்த ஒரு தொகுப்பாளினி தான் அர்ச்சனா. கடந்த 2000மாவது ஆண்டில் பிரபல சன் தொலைக்காட்சியில் இடம்பெற்ற காமெடி டைம் நிகழ்ச்சியில் தான் இவர் முதன்முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 21 ஆண்டுகளாக இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

12க்கும் பல பிரபலமான நிகழ்ச்சிகளை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுத்து வழங்கி வருகின்றார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் அர்ச்சனா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு வெளியான “என் வழி தனி வழி” என்ற படத்தின் மூலம் இவர் நடிகையாகவும் வலம்வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூளைக்கு செல்லும் நரம்பில் பிரச்சனை ஏற்பட்டு அறுவைசிகிச்சை மேற்கொணடர். இந்நிலையில் பல நாட்கள் கழித்து தனது Youtube சேனல் வழியாக ரசிகர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் எப்போது மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்குவீர்கள் என்று ரசிகர்கள் கேட்டபோது. இப்பொழுதே மீண்டும் களமிறங்க ஆசையாக உள்ளேன். ஆனால் என் வலது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டிருக்கிறது.

ஆகையால் என்னால் வெகுநேரம் நிற்க முடியாது. எனவே பூரண குணமடைந்த பிறகு நிச்சயம் மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளார்.

Related posts