நடிகர், நடிகைகள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனநிலை பரவலாகவே இருந்து வருகிறது என்றே கூறலாம். வெகு சிலர் செய்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்த கலைத்துறையையும் அவமானப்படுத்துவது கொச்சையாக பேசுவது என்பது உண்மையில் கண்டிக்கத்தக்கது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியின் மூலம் பாடகியாக அறிமுகமான சௌந்தர்யா, அவருக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
“சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியின் மூலமாக பாடகராக அறிமுகமான சௌந்தர்யா, அதன்பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பு விக்னேஷ் கார்த்திக் இயக்கிய சௌந்தர்யா நடிப்பில் வெளியான “Yours Shamefully” என்ற குறும்படம் மக்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.
பாடல், நடனம், மேடை நாடகம் மற்றும் திரைப்படம் என்று பிஸியாக இருந்து வரும் நடிகை சௌந்தர்யா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த பேராசிரியர் என்று கூறப்படும் ஒருவர் சௌந்தர்யாவின் சமூக வலைத்தளத்தில் ஆபாசமான சில கேள்விகளை கேட்டுள்ளார். இது குறித்த அந்த நபரின் கொச்சை கேள்விகளையும் அதற்கு தான் அளித்த பதிலையும் தற்பொழுது Screen Shot எடுத்து பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா.
பேராசிரியர் என்று தன்னை கூறிக்கொள்ளும் அந்த மர்ம நபர் “என் கூட படுக்கிறாயா”, “எவ்வளவு வேணாலும் காசு தருகிறேன்” என்றெல்லாம் கொச்சையாக பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த சௌந்தர்யா “மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறேன் என்று தனது சமூகவலைத்தளத்தில் கூறிக்கொள்ளும் அந்த நபர் பணிசெய்யும் இடத்தில் உள்ள பெண்கள் பத்திரமாக இருப்பார்கள் என்று நினைக்கிறன்”. “இருப்பினும் அவர் இருக்குமிடத்தில் உள்ள பெண்கள் ஜாக்கிரதையாவே இருங்கள்” என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சில காம கொடூரர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர்.