TamilSaaga

“எப்போ சார் திரும்ப நடிப்பீங்க” – ரிஎன்ட்ரி கொடுக்கும் வடிவேலு ? : வெளியான சில சுவாரசிய தகவல்கள்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர்களில் ஒருவராக மாறிவிட்ட வடிவேலு அவர்களுடைய ரி-என்ட்ரிக்காக அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கிரன் அவர்களின் “என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தனது கலைப் பயணத்தை தொடங்கிய வடிவேலு, தனது தனித்துவமான நடிப்பினாலும், அவருக்கே உரித்தான Body Language மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

ஏறத்தாள 30 ஆண்டுகளாக பல நூறு படங்களில், தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் கைகோர்த்து நடித்துள்ளார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக 2017 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” திரைப்படத்தில் தோன்றினார். அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக வடிவேலு அவர்கள் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு “டிடெக்ட்டிவ் நேசமணி” என்ற கதையில் வடிவேலு அவர்கள் நடிக்கவிருப்பதாக சில போஸ்டர்கள் வெளியான நிலையில் அது வெறும் வதந்தி என்பது அதன் பின்னராக தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் OTT தளத்தில் சில நிகழ்ச்சிகளை வடிவேலு தொகுத்து வழங்க உள்ளதாகவும் வெளியான செய்திகளையும் போலி என்று அதன் பிறகு தெரிய வந்தது.

இதனடியடுத்து சுராஜ் இயக்கும் “நாய் சேகர்” என்ற திரைப்படத்தில் வடிவேலு அவர்கள் நடித்து வருவதாக சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் 8க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் தோன்றாத வடிவேலு, மீண்டும் திரையில் எப்போது தோன்றுவார் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு அடுத்து நடிக்கவிருக்கும் கதையை குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts