TamilSaaga

யூஹுவா ஹாக்கர் மையம் மூடப்பட்டது – மக்களை உஷார்படுத்திய சுகாதார அமைச்சகம்

சிங்கப்பூரில் 347 ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள யுஹுவா மார்க்கெட் மற்றும் ஹாக்கர் சென்டரின் உணவுப் பிரிவு இன்று ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில், ஜூரோங்-கிளெமென்டி டவுன் கவுன்சில் சந்தை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வார கால மூடலை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் ஜூரோங்-க்ளெமெண்டி டவுன் கவுன்சில் (JRTC) ஆகஸ்ட் 4 அன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் ஏழு பெருந்தொற்று வழக்குகள் கண்டறியப்பட்ட பிறகு, ஹாக்கர் மையத்தின் வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்ய இது வழிவகுக்கும். வியாபாரி மையத்தில் பணிபுரியும் அனைத்து தனிநபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், பிறகு அவர்கள் சோதிக்கப்படுவார்கள்.

ஜூலை 21 மற்றும் ஆகஸ்ட் 4க்குள் சந்தை மற்றும் விற்பனையாளர் மையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் தங்களுக்கு இலவசமாக பெருந்தொற்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

MUH வெளியிட்ட அறிக்கையில் யுகுவா மார்க்கெட் & ஹாக்கர் மையத்திற்கு வருபவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தியதுடன், அவர்கள் வருகை அல்லது தொடர்பு கொண்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு முடிந்தவரை சமூக தொடர்புகளை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Related posts