சனிக்கிழமை அதுவுமாக காலையிலேயே நீங்கள் படிக்கும் இந்த செய்தி உண்மையில் உங்களுக்கு புத்துணர்ச்சியை தரலாம்.
பெண் என்றாலே அழகு தான்… அதுவும் மிக மிக குண்டாக இருந்து இப்போது 42 கிலோ வரை உடையை வழித்து எடுத்துள்ள நமது சிங்கப்பூரின் இந்த பெண் உண்மையில் பேரழகு தான்.
ஆம்! சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், 2 வருடங்களுக்கு முன்பு… அதாவது கொரோனா காலக்கட்டத்துக்கு முன்பு வரை 110 கிலோ எடை இருந்துள்ளார். ஆனால், அதன் பிறகு, தனது எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த அப்பெண், அதற்கான முயற்சியில் இறங்கினார்.
இதற்காக இரண்டு முக்கிய விஷயங்களை பின்பற்றினார்,
ஒன்று 16:8 என்ற கட்டுப்பாடுடன் உணவு சாப்பிடுவது. மற்றொன்று நடைபயிற்சி.
அதென்ன 16:8? அதாவது ஒருநாளைக்கு 8 மணி நேரம் உணவை பிரித்து பிரித்து சாப்பிடுவார். இப்போது ஒரு உணவு சாப்பிடுகிறார் என்றால், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அடுத்த உணவு. இப்படியாக 8 மணி நேரம். மீதம் 16 மணி நேரம், வயிற்றுக்குள் எந்த ஆகாரமும் செல்லாது.
பிறகு, தினமும் 6 கி.மீ முதல் 10 கி.மீ வரை நடைபயணம் மேற்கொள்வார். அதுமட்டுமின்றி, வாரத்துக்கு 5 முறை உடற்பயிற்சியும் செய்வார்.
இப்படியாக 2 வருடங்கள் தினமும் இவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலனாக இப்போது 110 கிலோவில் இருந்து 68 கிலோவுக்கு வந்துள்ளார்.
இதனை அவரே தனது டிக்டாக்கில் பதிவு செய்ய, பலரும் வியப்படைந்து ‘நீங்கள் தான் எங்களது ரோல் மாடல்’ என்றெல்லாம் அவருக்கு பதில் அளித்து வருகின்றனர்.
உண்மையில், உடல் எடை குறைத்த பிறகு அப்பெண் மிக அழகாக மாறியுள்ளார். அப்புறம் நீங்க எவ்ளோ வெயிட்டு?