TamilSaaga

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் மிஸ்ஸான 17 கோடி ரூபாய்… மறக்காம அடுத்த வார லாட்டரியை வாங்கிடுங்க… வின்னருக்கு காத்திருக்கும் உச்சபட்ச தொகை

சிங்கப்பூரில் லாட்டரி என்பது சட்டபூர்வமானது தான். இதனாலேயே பல லாட்டரி நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகிறது. இதில் அனைவருக்கும் ரொம்பவே பிரபலமானது தான் TOTO.

TOTO லாட்டரியில் வாரம் இருமுறை குலுக்கல் நடைபெறும். திங்கள் மற்றும் வியாழன்கிழமை மாலை 6மணிக்கு மேல் இது நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான இரண்டாவது குலுக்கல் வியாழன் மாலை நடந்தது. அதில் க்ரூப் 1ல் முதல் பரிசாக $2,900,530 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 17 கோடி ரூபாய் கணக்கிடப்படுகிறது. துரதிஷ்டமாக இந்த பரிசினை யாரும் பெறவில்லை. இந்த பரிசுத்தொகையான $2,900,530 சிங்கப்பூர் டாலரை அடுத்த குலுக்கலில் சேர்க்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் க்ரூப் 2வான இரண்டாம் பரிசினை ஒருவர் தட்டி சென்றிருக்கிறார். அவருக்கு பரிசாக $349,496 சிங்கப்பூர் டாலர் விழுந்திருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியாக கணக்கிடப்படுகிறது. இந்த பரிசுக்கான டிக்கெட்டை NTUC FP Marine Parade – 6 Marine Parade Centralல் Ordinary Entryல் வாங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், க்ரூப் 3ல் $2794 சிங்கப்பூர் டாலரை 86 பேர் பெற்றுள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்ச ரூபாயாக கணக்கிடப்படுகிறது. குறைந்தபட்சமாக $10 சிங்கப்பூர் டாலரை 126,353 பேர் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் தமிழ் சாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த வருடத்தின் கடைசி வார குலுக்கல் வரும் திங்கள் கிழமை டிச.26ந் தேதி நடைபெற இருக்கிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts