பிறக்கும் குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது என்பது சகஜம் தான், அவர்கள் வளர வளர அந்த உபாதைகள் தாக்கம் மெல்ல குறைந்து பின் மறைந்தும் போகும். ஆனால் சில குழந்தைகளின் வாழ்கை அப்படி நகர்வதில்லை, மாறாக பிறக்கும்போது நல்ல உடல்நலத்துடன் காணப்படும் குழந்தைகள் நாளடைவில் மீளாத்துயரில் சிக்கிக்கொள்கின்றனர். அமெலியா என்ற இந்த சிங்கப்பூர் சிறுமிக்கும் தற்போது அந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு சகோதரிகளான அமண்டா மற்றும் அமெலியா என்ஜி-யின் கதையை Mothership செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது
“என்னை கடவுளிடம் அனுப்பிடாதீங்க அம்மா”.. சிங்கப்பூரில் தனது மகளை காக்க போராடும் தாய்!
INAD என்பது மிகவும் அரிதான பரம்பரை நியூரோடிஜெனரேட்டிவ் கோளாறு ஆகும். INAD உடன் தற்போது சுமார் 150 குழந்தைகள் மட்டுமே வாழ்கின்றனர் என்று அமெலியா தாய் வெண்டி லோ Mothership நிறுவனத்திடம் கூறினார். தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் INAD-க்கு சிகிச்சை எதுவும் இல்லை, மேலும் இந்தக் கோளாறு உள்ள குழந்தைகளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் தான் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நமது அமெலியா அக்டோபரில் தனது 15 வயதை எட்டியுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு அமெலியாவுக்கு உள்ள நோயை குறித்து அறிவது எப்படி உள்ளது என்று அந்த தாயை கேட்டபோது அவர் பல விஷயங்களை Mothership நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டார்.