TamilSaaga

புக்கிட் தீமாவில் விபத்து – டாக்ஸிக்கு பின் சிக்கியவர்களை போராடி மீட்ட மீட்புப்படையினர்

சிங்கப்பூரில் புக்கிட் தீமா (Bukit Timah) சாலை பகுதிக்கும் சிலிகி (Selegie) சாலை பகுதிக்கும் இடையே உள்ள சாலை சந்திப்பில் ஒரு டாக்ஸி மற்றும் கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவம் இன்று அதிகாலையில் அந்த பகுதியில் நடந்துள்ளது.

காலை 3 மணி அளவில் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். டாக்சியின் பின்புற இருக்கையில் சிக்கி கொண்டிருந்தவர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், பேரிடர் மேலாண்மை குழுவினர் உதவியோடு இரும்புக் கருவிகளை கொண்டு மீட்டுள்ளனர்.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸியின் பின்புறம் இருந்த பயணிகள் சிலமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாத்திரமாக மீட்கப்பட்டனர்.

விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts