TamilSaaga

சிங்கப்பூரில் மதுரை டேஸ்ட்டையே மிஞ்சும் ருசி… அன்று தனது தாய் சந்தித்த அவமானத்துக்கு.. “சிங்கிள் வடை”க்காக இன்று மக்களை கியூவில் நிற்க வைத்து சாதித்த மகன்!

சிங்கப்பூரில் தனது தாய் பட்ட அவமானத்துக்கு பதில் சொல்லும் விதமாக, இன்று சொல்லி சொல்லி அடித்து வருகிறார் ஒரு மகன். தாயின் மனதையும் குளிர்வித்து வருகிறார்.

ஆம்! சிங்கப்பூரில் சூர்யா செல்வராஜா என்பரை பற்றியும், அவர் நடத்திவரும் ‘தி ஒரிஜினல் வடை’ எனும் கடையைப் பற்றித் தான் பேசுகிறோம்.

சிங்கப்பூர் கெயிலாங் செராய்யில் (Geylang Serai) உள்ள ரமலான் கடைவீதியில், கடந்த ஏப்ரலில் நோன்பு மாதத்தின் போது, ஒரு கடையில் மட்டும் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதனால் அங்கு உணவு விற்பனை செய்யப்படும் ஒரு zone-ல் நுழைய, மக்கள் வரிசையில் நிற்பதை அமைப்பாளர்கள் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது.

அது யாருடைய கடை என்று பார்த்தால், சூர்யா செல்வராஜாவின் ‘தி ஒரிஜினல் வடை’ ஷாப் தான்.

33 வயதான சூர்யாவின் குடும்பத்தினர், கடந்த 30 வருடங்களாக ‘தி ஒரிஜினல் வடை’ எனும் உணவகத்தை சிங்கப்பூரில் நடத்தி வருகின்றனர். இத்தனை வருடங்களாக அவரது தாய் யமுனா ராணி அந்த கடையை வெற்றிகரமாக நடத்தி வந்த நிலையில், பெருந்தொற்று காலத்திற்கு முன்பு தான், சூர்யா அதற்கு பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். ஆனால், அதற்குள் தொற்று உலகம் முழுவதையும் முடக்க, சூர்யாவும் செய்வதறியாது நின்றார்.

அப்போது தான் ரமலான் நோன்பு மாதம் கைக்கொடுத்தது. ரமலான் நேரத்தில், கெயிலாங் செராய்யில், தனது தலைமையில் முதன் முதலாக கடையை சூர்யா திறந்தார். மசால் வடை, உளுந்து வடை என்ற பாரம்பரியமான இந்திய வடையை கொஞ்சம் மாற்றி, இறால் வடைகளை விற்கத் தொடங்கிய முன்னோடிகளில் இவரது தாயாரும் ஒருவர்.

மேலும் படிக்க – Arms, Chest என Gym-ல் சிங்கப்பூர் Reporters-களை வியக்க வைத்த தமிழ் ஊழியர்களின் “Six Pack”

இடையில் பல வேலைகளில் ஈடுபட்ட சூர்யா, 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொழிலில் முழுமையாக இறங்க முடிவு செய்தார். அப்போதிலிருந்தே வியாபாரத்தை மேம்படுத்த பல வழிகளை ஆராய்ந்து வருகிறார். சீஸ் வடை உள்ளிட்ட பல்வேறு வகையான வடைகளை சூர்யா அறிமுகம் செய்துள்ளார். ஆனால், எல்லாவற்றையும் விட இறால் வடைக்கு தான் கூட்டம் அலை மோதுகிறது.

இடையில், புரோட்டா, சாதம் உள்ளிட்டவற்றை விற்க முயன்ற சூர்யாவுக்கு தோல்வியே மிஞ்சியது. இதனால் கிட்டத்தட்ட ரூ.300,000 டாலர் வரை இவருக்கு இழப்பு ஏற்பட்டது.

இளம் வயதில் தாயாருடன் சேர்ந்து வடை விற்றதால் சூர்யாவும், அவரது தாயும் கேலி, கிண்டலுக்கு ஆளானார்கள். சிறு வயது முதலே தன் அம்மாவுக்கு உதவியாய் இருந்து வரும் சூர்யா, தன் கண் முன்னாலேயே மற்றவர்கள் கிண்டல் செய்வதை பார்க்க நேரிட்டது. அப்போதில் இருந்தே, தன் தாய் தொடங்கிய இந்த வியாபாரத்தை பெரியளவில் விஸ்தரிக்க வேண்டும் என்பதே, சூர்யாவின் நோக்கமாக இருந்தது. இன்று அதை சாதித்தும் காட்டியுள்ளார்.

சிறு வயதில் எண் 32, ஜு சியாட் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் தாயாருடன் இறால் வடைகளை விற்ற சூர்யா, தற்போது அதே இடத்தில் பெரிய வடைக் கடையை திறந்துள்ளார்.

அதுமட்டுமில்ல, இப்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவெனில், சிங்கப்பூரில் தங்கள் கடையின் எட்டாவது Branch-ஐ சூர்யா திறந்துள்ளார். Geylang Serai Market and Food Centre-ல் தான் இந்த புதிய கடை திறக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts