TamilSaaga

‘கதவை திறந்து வைத்து என் முன்னாடி குளி’ – பணிப்பெண்ணை மானபங்கப்படுத்திய பெண் கைது?

சிங்கப்பூரில் தன்னிடம் வேலை பார்த்து வந்த இந்தோனேசிய பணிப்பெண்ணை ஒருவரை வேண்டுமென்றே காயப்படுத்தியும், அந்த பெண்ணை தன் முன் கதவுகளை திறந்து வைத்து குளிக்கச்செய்தும் மானபங்கப்படுத்திய காரணங்களுக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண்மணி மீது 6 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ரோஸ்டயானா அப்துல் ரஹீம் எனும் அந்தப் பெண் மாயாங் சாரியை என்ற அந்த இந்தோனேசிய பெண்ணை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து துன்புறுத்தி வருவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. பணிப்பெண்ணின் வயது தற்போது குறிப்பிடப்படவில்லை.

ரோஸ்டயானா அந்த பணிப்பெண்ணின் மீது துர்நாற்றம் அடிப்பதாக கூறி, கதவை திறந்து வைத்து அவரை தன்முன் குளிக்கும் படியும், பிறகு சன்னல்களை மூட விடாமல் ஆடைகளை மாற்றும்படியும் கூறியுள்ளார். பகல் நேரம் முழுவதும் ரோஸ் டயானாவின் பிள்ளைகளை அவரது தாயார் வீட்டில் கவனித்துக் கொண்ட அந்த இந்தோனேசிய பெண், பின் இரவு வீடு திரும்பியதும் வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தபட்டுள்ளார்.

மேலும் அந்த பணிப்பெண்ணுக்கு விடுப்பு அளிக்காமலும், பகலில் ஓய்வு அளிக்காமலும் கொடுமைகளை செய்துள்ளார் ரோஸ். பணிப்பெண்ணின் முகத்தில் அவ்வப்போது மாவினை கொட்டி பணிப்பெண்ணின் கண்களை எரிச்சலடைய செய்துள்ளார்.

இதெல்லாம் போதாதென்று அந்த பெண்ணுடைய பிறப்பு உறுப்பில் உதைத்து காயப்படுத்தியுள்ளார். கொடூர செயலில் ஈடுபட்ட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது 7500 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts