TamilSaaga

சிங்கப்பூர் இன்று (அக்.17) TOTO லாட்டரி குலுக்கல்… முதல் பரிசு 8,000,000 டாலர் தொகை.. இந்திய மதிப்பில் 65 கோடி ரூபாய் – ஓவர் நைட்டில் மில்லியனராகும் வாய்ப்பு!

சிங்கப்பூரில் இன்று (அக்.17) திங்கட்கிழமை இந்த வாரத்துக்கான முதல் TOTO குலுக்கல் நடைபெற உள்ளது. சரியாக மாலை 6.30 மணிக்கு இந்த குலுக்கல் நடைபெறும்.

இந்த முறை முதல் பரிசு $48000,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 65 கோடி. பொதுவாக லாட்டரியில் ஜெயிப்பது என்பது முழுவதும்,அதிர்ஷ்டத்தை சார்ந்தே உள்ளது. அதற்காக சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை லாட்டரி வாங்கி வீண் செய்வது என்பது ஏற்புடையதல்ல.

முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற அக்.13 குலுக்கலில் Group 1 எனப்படும் ஜாக்பாட் முதல் பரிசான 5,469,511 டாலர் யாருக்கும் கிடைக்கவில்லை. 2, 4,8 17, 22, 40 எனும் அந்த வெற்றிக்கான லாட்டரி எண்ணை யாரும் வாங்கவில்லை.

மேலும் படிக்க – சுவையான செய்தி… சிங்கப்பூரில் மனிதர்கள் பூச்சிகளை சாப்பிட விரைவில் அனுமதி!

எனினும், Group 2 எனப்படும் இரண்டாம் பரிசுக்கான தொகை $93,427 டாலர் தொகையை 6 பேர் வென்றனர். இந்திய மதிப்பில் 76 லட்சம் தொகை இவர்களுக்கு பரிசாக கிடைத்தது. Group 3 எனப்படும் மூன்றாவது பரிசுக்கான தொகை 1,460 டாலர் தொகையை 264 பேர் வென்றனர்.

இந்நிலையில், இன்று பெரும் தொகைக்கான குலுக்கல் நடைபெற உள்ளது. இந்த முறை நீங்க லாட்டரி வாங்கியிருந்தால், உங்களுக்கும் ஆல் தி பெஸ்ட்! ஆனால், இதையே வேலையாக வைத்திருக்க வேண்டாம் என்பதை “தமிழ் சாகா” மீண்டும் அறிவுறுத்துகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts