TamilSaaga

“சிங்கப்பூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சிவ துர்கா ஆலயம்” – நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அற்புத வரலாறு

சிங்கப்பூரில் பொத்தோங் பாசீர் என்ற இடத்தில் அமைத்துள்ளது தான் உலக அளவில் பிரசித்தி பெற்ற அற்புத ஸ்ரீ சிவ துர்கா ஆலயம்.

கருவறை, பிரகாரம், இராஜ கோபுரம், அர்த்த மண்டபம் போன்ற பல சாஸ்திரமுறைப்படு அமைந்திருக்கும் ஒரு முக்கிய கோயிலாக உள்ளது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2022”

கோயில் வரலாறு:

சிங்கப்பூர் ஸ்ரீ சிவதுர்கா கோயிலானது நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கோயிலாகும். துவக்கத்தில் ரூமா மிஸ்கின் என்ற இடத்தில் கோயில் அமைந்திருந்தது. அது காவல்துறை வசிப்பு பகுதி என்றதால் பிறகு ஜார்ஜஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.

1962 ஆம் ஆண்டு மன்மதன் கோயில் என்ற பெயரில் உரிமம் பெற்று புதிய அமைப்புடன் கோயில் கட்ட நிர்வாகக் குழு திட்டமிட்டது.

அப்போது தர்மகர்த்தாவாக இருந்த திரு. கோபால்சாமி தன் சொந்த செலவில் துர்கையம்மனுக்கு சிலை வடிவமைத்து கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் நடத்தினார்.

கோயில் சிறப்பு

இந்த கோயிலின் பிரதான தெய்வமாகிய சிவ துர்கை தெற்கில் அமர்ந்து வடக்கு பார்க்கும் வண்ணத்தில் அமைந்துள்ளார்.

இங்கு விஷேசமாக ராகுகால துர்கா பூஜை நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி இந்த கோயிலில் நடைபெறும் விளக்கு பூஜை பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts