TamilSaaga

சிங்கப்பூரில் பெண்ணை 7 முறை வெட்டித் தாக்குதல்… புக்கிட் பெடோக்கில் அதிர்ச்சி சம்பவம் – குற்றவாளிக்கு 18 மாத ஜெயில்

சிங்கப்பூரில் 33 வயது மதிக்கத்தக்க நபர் Xie Bin Bin என்ற நபர் புக்கிட் படோக் காப்பி கடையில் ஒரு பெண்ணை Cleaver கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒரு மீன் நூடுல் கடையில் பணியாற்றுபவர் என ஷின் மின் டெய்லி செய்து ஒன்றில் வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்டவர் 35 வயது பெண்ணான ஜாங் வென் ஹாங் என்பவர் ஆவார்.

இந்த பெண் மார்ச் 26 முதல் பணியில் சேர்ந்ததில் இருந்து Xie இன் நடவடிக்கைகள் சக ஊழியர்களிடம் சண்டைகளை தூண்டியது.

கடந்த ஏப்ரல் 27 அன்று Xie தனது உணவை தயாரிக்க கடையின் இறால்களை எடுத்து பயன்படுத்துவதை ஜாங் கவனித்து அதை பற்றி அவரிடம் கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் துவங்கியது.

வாடிக்கையாளருக்கு முன்பாகவே இந்த பிரச்சனை காரணமாக Xie அந்த பெண்ணின் தலை முடியை இழுத்து அவரது தலை மற்றும் கழுத்துப்பகுதியில் ஏறத்தாழ ஏழு முறை வெட்டியுள்ளார்.

வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்தியை மேசையின் மீது வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு Xie வெளியேறினார்.

பலத்த காயங்களுடன் ஜாங் உடனடியாக என்ஜி டேங் ஃபாங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இந்த குற்றத்துக்காக பெண்ணை தாக்கிய Xie க்கு 18 மாத சிறை தண்டனையும் 3 பிரம்படியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Photo Credit : ShinMin Daily News

Related posts