TamilSaaga

Corona Update : சிங்கப்பூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் இன்று (26 ஜூன்) புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் புதிதாக 6 பேருக்கும் தொற்று பரவியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 4 பேர் உளப்பட நாட்டில் இன்று 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட சிலருக்கு ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் இருந்தவர்களிடம் இருந்து தொற்று பரவியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 62,530 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,161ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 139 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 178 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை 35 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

தொற்றின் அளவை குறைக்க சிங்கப்பூர் அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஜூன் மாதம் 21ம் தேதி முதல் மேலும் பல தளர்வுகள் சிங்கப்பூரில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts