TamilSaaga

திடீர் மாற்றம்… ஐந்தே நாளில் பிளானை அப்படியே மாற்றிய Scoot – செப்.30-லிருந்தே தொடங்கும் டிக்கெட் புக்கிங் – Trichy ஏர்போர்ட்-ல் இருந்து Exclusive செய்தி!

SINGAPORE: கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பாக, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தினம் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு எடுக்கப்படும் விமானம், திருச்சியில் இரவு 10.50 மணிக்கு வந்து சேரும். அதுபோல், இரவு 11 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து எடுக்கப்படும் இரண்டாவது விமானம், நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

அதுபோல், திருச்சியில் இருந்து முதல் Return விமானம், இரவு 11.50 மணிக்கு முதல் விமானமும், நள்ளிரவு 1.30 மணிக்கு இரண்டாவது விமானமும் கிளம்பும். இதுதான் கொரோனாவுக்கு முந்தைய நடைமுறையாக இருந்தது.

இந்நிலையில், கொரோனாவுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரேயொரு விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், தற்போது மீண்டும் அந்த இரண்டாவது விமானத்தின் போக்குவரத்தை ஸ்கூட் நிறுவனம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. நவம்பர்.1 தேதியில் இருந்து இந்த விமானம் இயக்கப்படும் என்று ஸ்கூட் நிறுவனம், கடந்த ஆகஸ்ட்.13ம் தேதி அறிவித்தது.

இதில் மிக முக்கியமான தகவல் என்னவெனில், இந்த ஸ்கூட் விமானம் NON REFUNDABLE TICKETS-ஆக அறிவிக்கப்பட்டது. பயணிகள் டிக்கெட் புக் செய்துவிட்டு, Cancel செய்தால் பணம் Refund ஆகாது. அதேசமயம் பயண தேதியை மாற்ற வேண்டுமெனில் அபராதம் விதிக்கப்படும். தேதியை மாற்றுவதற்கு ஒரு கட்டணம் மற்றும் Fare Difference தொகையையும் கட்ட வேண்டியிருக்கும்.

எடுத்துக்கட்டாக ஒருவர் 10,000 ரூபாய்க்கு டிக்கெட் புக்கிங் செய்த பிறகு, பயண தேதியை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், Changing fees 4,500 ரூபாய் மற்றும் Fare difference 5,000 ரூபாய் என்று கிட்டத்தட்ட 9,000 ரூபாய் அளவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுதான் ticket date changing fees-ன் விதிகள். இனி எனவே, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் மிக கவனமாக தேதியை சரிபார்த்து புக்கிங் செய்ய வேண்டும். இந்த கட்டணம் ஒருசில நாட்களில் கம்மியாகவும், ஒருசில நாட்களில் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.

இந்நிலையில், நவம்பர் 1 முதல் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்து, டிக்கெட் விற்பனையை தொடங்கிய நிலையில், தற்போது ஸ்கூட் நிறுவனம் ஒரு அதிரடி மாற்றமாக, செப்டம்பர் 30ம் தேதியில் இருந்தே இந்த விமானம் இயங்கும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, செப்.30 முதல் பயணம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங்கையும் ஸ்கூட் திறந்துள்ளது.

ஸோ, பயணிகள் திருச்சிக்கு – சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் இந்த இரண்டாவது விமானத்தில் செப்.30ம் தேதியில் இருந்தே பயணிக்கலாம். அதற்கான டிக்கெட்டையும் இந்த நிமிடமே புக் பண்ணலாம்.

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி
96002 23091

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts